Breaking News
கால்பந்தில் திருச்சி அணி சாம்பியன்

திருச்சியில் நடைபெற்ற கார்டினர் நினைவுக் கோப்பை கால்பந்து போட்டியில், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஏ.எஃப்.கார்டினர் நினைவுக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதில் திருச்சி, கோவை, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 கல்லூரி அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

பிஷப் ஹீபர் கல்லூரி அணி வீரர் தேவேந்திரன் 2 கோல்களை அடித் தார். இப்போட்டியில், கோவை  நாராயணகுரு கல்லூரி அணி மூன்றாமிடமும், சென்னை நாசரேத் கலை, அறிவியல் கல்லூரி அணி நான்காவது இடமும் பெற்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.