Breaking News
தேசிய அளவில் எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்து விட்டது -திருமாவளவன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளனர். அதிமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி என முன்பே கூறினோம். தேசிய அளவில் எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்து விட்டது.

ராகுல்காந்தி உள்ளிட்டோரை இந்துக்களுக்கு எதிரிபோல் காட்டி விட்டார்கள். தமிழகத்தில் சாதி, மத வெறியர்களுக்கு இடம் இல்லை என்பதை மக்கள் நிரூபித்து விட்டார்கள். நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் அல்ல, அரசியல் காரணங்களுக்காக என் மீது விமர்சனம் செய்தனர்.

தமிழகம் போல் இன்றி பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சிதறி நின்றதால் வாக்குகளும் சிதறிவிட்டன. வாக்குகள் சிதறியது பாஜகவின் பெரும்பான்மைக்கு காரணமாக அமைந்து விட்டது. குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரும். தமிழ் நிலத்தில் தாமரை மலராது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.