Breaking News
க்ளாமரின் உச்சத்தை தொட்ட சமந்தா! அட்வைஸ் செய்த ரசிகர்களை இப்படியா அசிங்கப்படுத்துறது!

தமிழ் பெண்ணாக பிறந்து ஆந்திராவிற்கு மருமகளாக சென்றுள்ள நடிகை சமந்தாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் சமந்தாவின் புது படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் படுபிசியான கதாநாயகியாக வலம் வரும் சமந்தா கடந்த சில காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சமந்தா “ஒ பேபி” என்ற திரைப்படத்தில் 70 வயது பாட்டியாக நடித்துவருகிறார்.

வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திருமணத்திற்கு பின்னரும் எந்தவிதத் தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை முகம்சுளிக்க வைத்தார்.

அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சிலர் இப்படி எல்லாம் புகைப்படங்களை பதிவிடாதீர்கள் என்று மிகவும் அக்கறையுடன் அட்வைஸ் செய்தார்கள். ஆனால், சமந்தா மற்ற நடிகைகளை போல முகத்தில் அடித்தாற்போல், “இது என்னுடைய வாழ்க்கை திருமணத்திற்குப் பின்னர் நான் எப்படி வாழவேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும் என்று யாரும் எனக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஸ்டேட்டஸ் போட்டு அட்வைஸ் செய்த ரசிகர்களை மிகவும் கேவலப்படுத்தியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.