Breaking News
பீகார் தலைமை செயலக ஊழியர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து பணிக்கு வர தடை

பீகார் தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்டுகள் மற்றும் பளிச்சிடும் நிறத்திலான ஆடைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகள் உள்பட அனைத்து மட்டத்திலான ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பீகார் அரசின் உயர்மட்ட செயலாளர் மகாதேவ் பிரசாத் வெளியிட்டுள்ள உத்தரவில், “ அலுவலக கலாச்சாரத்திற்கு முரணான ஆடைகளில் அதிகாரிகளும் ஊழியர்களும் அலுவலகத்திற்கு வருவது கவனிக்கப்பட்டது. இது அலுவலக நல்லொழுக்கத்திற்கு எதிரானது.

அதிகாரிகளும் ஊழியர்களும் கண்ணியமாகவும், பொருத்தமாகவும், எளிமையாகவும், வேலை செய்யும் இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்கும் வெளிர் நிற ஆடைகளை தேர்வு செய்து அதை மட்டுமே அணிந்து வர வேண்டும்” என்று மகாதேவ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.