Breaking News
காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். கூட்டணி படை தாக்குதல்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜதிபால் என்ற பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என காஷ்மீர் போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்.பின் அதிரடி விரைவு படை, பட்டாலியன் பிரிவு வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டணியாக அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இதன்பின் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு வீரர்கள் தரப்பில் பதிலடி தரப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த சண்டையில் 3
பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் அதிகரிக்காத வகையில், மொபைல் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை ஆகியவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.