Breaking News
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வெறிச்சோடிய போயஸ் தோட்டம்

சசிகலா வசிக்கும் போயஸ் தோட்டம் இல்லத்தின் அருகே கடந்த சில நாட்களாக தொண்டர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நேற்று காலையும் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குவிந்திருந்தனர்.

ஆனால் பெண்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. சசிகலாவுக்கு ஆதரவாகவும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பை தவறாகப் புரிந்துகொண்ட சிலர் திடீரென பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்.

ஒருசில நிமிடங்களில், தீர்ப்பின் உண்மை நிலவரத்தை தெரிந்துகொண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பரபரப்பான நிலை காணப்பட்டது. தீர்ப்பு வெளியான பிறகு, தொண்டர்கள் கூட்டம் கலையத் தொடங்கி, சிறிது நேரத்தில் அப்பகுதியே வெறிச்சோடியது.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.