Breaking News
கோவை அருகே லாரி மோதி அரசு பஸ் கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பஸ், சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்ற போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
லாரி மோதிய வேகத்தில் அரசு பஸ் சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.