Breaking News
‘தூய்மை இந்தியா’ திட்ட விளம்பர தூதராக நடிகை ஷில்பா ஷெட்டி நியமனம்

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை ஷில்பா ஷெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்ட விளம்பர தூதராக நடிகை ஷில்பா ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். 41 வயதாகும் ஷில்பா ஷெட்டி, ரோடுகளில் குப்பைகளை போடுபவர்களை திருத்தும்வகையில் ரேடியோ, தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த இயக்கத்துக்கான அவரது படத்துடன் கூடிய விளம்பர சுவரொட்டிகள் விரைவில் நாடு முழுவதும் வினியோகிக்கப்பட உள்ளன.

இதுபற்றி தூய்மை இந்தியா திட்டத்தின் இயக்குனர் பிரவீண் பிரகாஷ் கூறும்போது, ‘‘மக்களிடம் பிரபலமாக விளங்குபவர்களை இந்த திட்டத்தின் இலக்கை அடைய உதவி செய்யும்படி கேட்டு வருகிறோம். அதன்படி ஷில்பா ஷெட்டியின் பிரசார இயக்கம் விரைவில் தேசிய அளவில் நடைபெறும்’’ என்றார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.