Breaking News

30 கம்பெனி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்னை வருகை
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவல் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சென்னைக்கு 30 கம்பெனி சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், க்ரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
தமிழகத்தின் முக்கிய அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.