Breaking News
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நிதிநிலை அறிக்கை இருக்கும்: டி.ஜெயக்குமார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2017-2018 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். இதையொட்டு அவர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜெயக்குமார்,

நிதி பற்றாக்குறை இருந்தாலும் மக்களுக்கான நலத்திட்டத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளமாட்டோம். நிதிப் பற்றாக்குறை போன்ற எத்தனை தடைகள் வந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் தொடரும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நிதிநிலை அறிக்கை இருக்கும். ஜெயலலிதா ஆசியுடன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறேன் என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.