Breaking News
இதனால் தான் சிம்பு, ஹன்சிகா காதல் முறிந்ததா?

வாலு படத்தில் நடித்து வந்தபோது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தார்கள். ஆனால் இதுபற்றி அறிவிக்காமல் இருவரும் ரகசியம் காத்து வந்தனர். படம் முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. காதல் முறிந்த பிறகும் சில காட்சிகளில் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

இந்நிலையில் ஹன்சிகா சிம்புவை பிரிந்தது பற்றி தற்போது பேசியுள்ளார். நானும், சிம்புவும் சரியான ஜோடி, அம்சமான ஜோடி என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது என்கிறார் ஹன்சிகா.

சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பிரிந்துவிட்டேன் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார். ஆனால் அது என்ன வார்த்தை என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

ஹன்சிகா தற்போது மோகன்லால் நடித்து வரும் வில்லன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறார். ஹன்சிகா நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.