Breaking News
பெட்ரோல்,டீசலுக்கு மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 0.75% தள்ளுபடி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு

டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் 0.75 தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதிமந்திரி அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

# ரெயில்வே பயணச்சீட்டு மின்னனு முறையில் பதிவு செய்தால் ரூ.10 லட்சம் வரை காப்பீடு

# புறநகர் ரெயில்களில் மின்னணு முறையில் சீசன் டிக்கெட் வாங்கினால் 0.5 % தள்ளுபடி

# கிசான் கிரெடிக் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கார்டு வழங்கப்படும்

# இந்த திட்டங்களுக்கான தள்ளுபடி ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்

# பெட்ரோல்,டீசல் நிலையங்களில் மின்னணு முறையில் பரிவர்த்தனை செய்தால் 0.75 % தள்ளுபடி

# பணமில்லா பரிவர்த்தனையே பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு

# டோல்கேட்டில் கார்டு பயன்படுத்தினால் 0.5 % கட்டணச்சலுகை

# ரெயில்வே நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்தால் 5 % சலுகை

# சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 10 % தள்ளுபடி

# எல்.ஐ.சி.காப்பீடுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 8 % தள்ளுபடி

# மின்னணு முறைக்கு நுகர்வோர்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது

# மின்னணு பணப்பரிமாற்றமே பண மதிப்பிழப்பு அறிவிப்பின் இலக்கு

# ரிசர்வ் வங்கி திட்டமிட்டபடி புதிய பண தாள்களை வெளியிட்டு வருகிறது.

# ரெயில்களில் மின்னணு முறையில் டிக்கெட் வாங்கினால் ரூ.10 லட்சத்திற்கு காப்பீடு

# ரெயில்களில் உணவு வாங்க மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 5 % தள்ளுபடி

# கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மின்னணு பரிவர்த்தனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது

விரைவில் தள்ளுபடி அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.