Breaking News
போலி பாஸ்போர்ட்: 4 பேர் கைது

மீனம்பாக்கம்- இலங்கையை சேர்ந்தவர்கள் சர்குணதாஸ் (36), ஜனார்த்தனன் (20), சுந்தர்ராஜ் (35). இவர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முற்பட்டனர். இதையடுத்து விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர், தஞ்சாவூருக்கு சென்று சிவகுமார் (38) என்ற ஏஜென்டை அணுகினர். அவர், ரூ.4.5 லட்சம் வாங்கி கொண்டு போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தார். சர்குணதாஸ், ஜனார்த்தனன் ஆகியோருக்கு கனடாவுக்கு செல்லும் விசா, சவுந்தர்ராஜுக்கு அயர்லாந்து நாடு செல்வதற்கான விசாவும் பெற்றுவிட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் அனுப்பினார். ஏஜென்ட் சிவகுமார், வெளியே நின்றிருந்தார். குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் இவர்கள் போலி பாஸ்போர்ட்டில் செல்ல இருந்தது தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஏஜென்டும் கைது செய்யப்பட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.