Breaking News
ட்விட்டர் நிறுவனத்திடம் பணிந்தது அமெரிக்க அரசு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சமூக வலைத்தளமான ட்விட்டரில் கணக்கு தொடங்கியவரின் அடையாளத்தை அந்நிறுவனத்திடமிருந்து அமெரிக்க அரசாங்கம் கேட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ட்விட்டர் நிறுவனம் அணுகிய அதற்கு மறுநாள் தனது கோரிக்கையை அமெரிக்கா கைவிட்டுள்ளது. @ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கு அதிபர் டிரம்பின் குடியேற்ற கொள்ளைகளை விமர்சித்து பதிவிடப்பட்டிருந்தது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவையில் பணியாற்றும் ஊழியர்களால் இந்த கணக்கு நடத்தப்படுவதாக கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அந்த ட்விட்டரில் முகவரியில் இயங்குபவர்களின் அடையாள தகவலை கேட்டு அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் ஆணை ஒன்றை வழங்கியிருந்தனர்.
ஆனால், ட்விட்டர் நிறுவனம் இதுதொடர்பாக தொடர்ந்து வழக்கை அடுத்து அரசாங்கத்தின் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறியுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் பதிந்த ஒற்றை நாள் ஆயுட்காலம் கொண்ட வழக்கை தொடர்ந்து @ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கை பின் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 38,000 லிருந்து 1,58,000 ஆக வேகமாக வளர்ந்தது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் ட்விட்டருக்கு வழங்கிய ஆணையின்படி, ”@ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கின் பயன்பாட்டாளர் பெயர், கணக்கை இயக்கும் ஐ.டி, தொலைபேசி எண்கள், மெயில் முகவரிகள் மற்றும் கணினியின் ஐ.பி முகவரி உள்பட அனைத்துத் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.