Breaking News
உ.பி.: மீரட்-லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரில் இருந்து லக்னோ நோக்கி சென்ற ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை முன்டாபான்டே-ராம்பூர் நிலையங்களுக்கு இடையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, தடம் புரண்டு பக்கவாட்டில் கவிழ்ந்தன. இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.