Breaking News
டில்லியில் 3 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது

ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.

டில்லி போலீசின் சிறப்பு பிரிவு அதிகாரிகள், உ.பி., மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 3 பேரும் சிக்கினர். அவர்கள் ஜலந்தர், மும்பை மற்றும்பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட அவர்கள் முயற்சி செய்தனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.