Breaking News
20 ஆண்டுகளுக்கு பிறகு பாக். சிவன் கோயிலில் வழிபட இந்துக்களுக்கு அனுமதி

பாகிஸ்தானின் கைபர் பகதுன்கவா பகுதியில் சிவன் கோயில் அமைந்துள்ளது. அங்குள்ள இந்துக்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் சொத்து தகராறு காரணமாக கோயில் மூடப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டு இந்து அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனம், கோயில் அமைந்துள்ள இடத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், அதனால் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிக் உசைன் ஷா, கோயிலில் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.