Breaking News
குழந்தை கொலை: பேஸ்புக்கில் ஒளிபரப்பிய கொடூர தந்தை

11 மாத பெண் குழந்தையை கொலை செய்த கொடூர தந்தை, அந்த சம்பவத்தை பேஸ்புக்கில் ஒளிபரப்பியுள்ளார். தாய்லாந்து நாட்டை சேர்ந்த வுட்டிசன் வோங்டாலே,21, திரிராத்னா தம்பதிக்கு ௧௧ மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். புக்கெட் தீவுக்கு தனது குழந்தையுடன் சென்ற வுட்டிசன் ஓட்டலில் தங்கி உள்ளார். அப்போது திடீரென அந்த குழந்தையை துாக்கிட்டு கொலை செய்தார். இந்த கொடூர செயலை பேஸ்புக் லைவ் மூலமாக அவர் ஒளிபரப்பு செய்தார். வுட்டிசனும் தற்கொலை செய்து கொண்டார். பேஸ்புக்கில் லைவ் வீடியோ வசதி வந்ததில் இருந்து, பல்வேறு வன்முறை சம்பவங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இவ்விவகாரத்தில் பேஸ்புக் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.