Breaking News
பேச்சளவு நாட்டுப்பற்று வீணானது; செயலில் காட்டினார் கவுதம் காம்பீர்

நக்சல் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை தாம் ஏற்பதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பலியாயினர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.அரசு தரப்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: பலியான அனைத்து வீரரகளின் குழந்தைகளின் முழு கல்விச்செலவை தாம் ஏற்கவுள்ளதாகவும், இது தொடர்பான நடவடிக்கைய துவக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.
இது பாரட்டுக்குரிய செயல் என அனைவரும் வரவேற்றுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.