Breaking News

இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட்டில் கால்இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு– கர்நாடகா அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் (5 நாள்) விசாகப்பட்டினத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அபினவ் முகுந்த் (8 லீக்கில் 672 ரன்) தலைமையிலான தமிழக அணியில் தினேஷ் கார்த்திக் (592 ரன்), கவுசிக்காந்தி (709 ரன்), பாபா அபராஜித் (478 ரன்) உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். காயத்தால் அஸ்வின், முரளிவிஜய் விலகி விட்டனர்.

வினய்குமார் தலைமையிலான கர்நாடக அணி பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. சமீபத்தில் முச்சதம் அடித்த கருண் நாயர் மற்றும் லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்டூவர்ட் பின்னி போன்ற சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் அந்த அணியில் களம் இறங்குகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய கருண் நாயர், ராகுல் உள்ளிட்டோரின் வருகை தங்கள் அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் என்று வினய்குமார் தெரிவித்தார். இதனால் தமிழக அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் மும்பை–ஐதராபாத் (இடம்: ராய்ப்பூர்), குஜராத்–ஒடிசா (ஜெய்ப்பூர்), அரியானா–ஜார்கண்ட் (வதோதரா) ஆகிய அணிகள் மோதுகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.