Breaking News
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 4 பேர் பலி

சென்னைவடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி 4 பேர் பலியாயினர்.

வடபழனி அருகே தெற்கு பெருமாள் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பைக்குகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்தால் அதிகளவு கரும்புகை வெளியாகி சந்தியா, மீனாட்சி, செந்தில் மற்றும் சஞ்சய் ஆகிய 4 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியாயினர். தீவிபத்தில் சிக்கிய மேலும் 5 பேருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். விபத்து தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.