Breaking News
வடபழனி அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்கு மாடி வீட்டில் 8–ந் தேதி (நேற்று) அதிகாலையில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், கும்பகோணம் என்பவரின் மனைவி மீனாட்சி, தட்சணாமூர்த்தியின் மனைவி செல்வி,

சந்துருவின் மகள் சாலினி மற்றும் நாராயணனின் மகன் சஞ்சய் ஆகிய நான்கு பேர் உயிர் இழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

8 பேர் காயம்
இந்த துயர சம்பவத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

நிவாரண உதவி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.