Breaking News
தாடி பாலாஜி-நித்யா பிரச்சனை. போலீசார் எடுத்த அதிரடி முடிவு

காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலீஸ் நிலையம் வரை சென்றது. இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் கூறி கொண்டு வரும் நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த இன்று மாலை போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையின்போது நித்யா தனது கணவர் பாலாஜி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறியபோதிலும், பாலாஜி மனைவி நித்யா மீது எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இதனால் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். மனநல நிபுணர் ஒருவர் விரைவில் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.