Breaking News
பீச் தேசிய கபடி போட்டி: தமிழக அணிகள் இன்று தேர்வு

9–வது பீச் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவில் அடுத்த மாதம் (ஜூன்) 1–ந் தேதி முதல் 4–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் பீச் கபடி அணி தேர்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்–வீராங்கனைகள் சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரனை தொடர்பு கொள்ளலாம். 85 கிலோவுக்கு உட்பட்ட வீரர்களும், 75 கிலோவுக்கு உட்பட்ட வீராங்கனைகளும் இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்–வீராங்கனைகளுக்கு நாளை (29–ந் தேதி) முதல் 31–ந் தேதி வரை சென்னையில் பயிற்சி முகாம் நடைபெறும். இந்த தகவலை தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச்செயலாளர் ஏ.சபியுல்லா தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.