Breaking News
இலங்கையில் வெள்ளம் : பலி 150 ஆக உயர்வு

இலங்கையில், தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இலங்கையின், தென் மேற்கு பகுதி முழுவதும், வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 14 மாவட்டங்கள், வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன.
தொடர் மழையால், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, பலியானோரின் எண்ணிக்கை, 150 ஆக உயர்ந்துள்ளது; மேலும், 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதற்கிடையில், ‘இலங்கையில் மழை தொடரும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.