Breaking News
லண்டன் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

மேற்கு லண்டனில் லதிமேர் சாலையில் உள்ள 27 மாடி அடுக்குமாடி கிரன் பெல் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 40 தீயணைப்பு வாகனங்களில் 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டடத்தில் 120 வீடுகளில் வசித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
கட்டடத்தின் 2வது தளத்தில் தீ பற்றியதாகவும், தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. லண்டன் நேரப்படி அதிகாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.