Breaking News
இரண்டு நாட்களில் மழை: வானிலை மையம் கணிப்பு

‘இன்னும் இரு நாட்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில், நேற்று மாலை நிலவரப்படி, பாளையங்கோட்டையில், அதிகபட்சம், 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. வேலுார், திருத்தணியில், முறையே, 36, 37, சென்னையில், 37 டிகிரி செல்ஷியசாக இருந்தது.நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில்,
சிவகங்கை திருப்புத்துாரில், 4; மருங்காபுரியில், 4 செ.மீ., மழை பெய்து உள்ளது. சென்னையில், நேற்று மாலை, சில இடங்களில் லேசான துாரல் இருந்தது. அடுத்து வரும் இரு தினங்களில், மாநிலம் முழுவதும், பரவலாக லேசான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.