Breaking News
சன்னி லியோனை விசாரிக்க உத்தரவு!

`ராகினி எம்.எம்.எஸ்’. என்ற படத்தில் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடிகை சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் என குற்றம் சாட்டி கடந்த 2014ம் ஆண்டு ஹேமந்த் பர்ட்டீல் என்ற சமூக ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். அதில், அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சட்ட பிரிவு 295 ஏ-யை மீறும் வகையில் படத்தில் ஆபாச காட்சிகளை காட்டி மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த புகாரினை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி ஜே.எஸ். கோகட்டே இன்று பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் உத்தரவு எதுவும் பிறப்பிப்பதற்கு முன் விசாரணை ஒன்று நடத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே, பிரிவு 202ன் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.