Breaking News
போர்ச்சுக்கல்லில் காட்டுத் தீ: 57 பேர் பலி

ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லில், சமீபத்தில், கடுமையான வெயில் அடித்தது. 40 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவான இந்த வெப்பத்தால், பல இடங்களில், அனல் காற்று வீசியது. இதையடுத்து, காட்டு பகுதியில், 60 இடங்களில், திடீரென தீ பிடித்தது. காட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த தீ, வேகமாக பரவியது. தீயை அணைக்கும் பணியில், நுாற்றுக்கு அதிகமான வண்டிகள் மூலம், 1,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். லிரியா என்ற இடத்தில் கார்களில் பயணம் செய்த, 57 பேர், இந்த தீயில் சிக்கி இறந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். ‘அவர்கள் தீயில் இருந்து தப்பிக்க முயன்றவர்களா அல்லது செல்லும் வழியில், காட்டு தீயில் சிக்கி கொண்டவர்களா என்பது தெரியவில்லை’ என, அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.