Breaking News
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் லக்ஷர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

காஷ்மீர் மாநிலம் காகாபுராவில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இரவு முழுவதும் நீடித்த இத்துப்பாக்கி சண்டையின் முடிவில், லக்ஷர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களிடமிருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.