Breaking News
போர்ச்சுகல் புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுகல், அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளின் சுற்றுப்பயணத்தை இன்று (24ம் தேதி) துவங்கியுள்ளார்.
முதற்கட்டமாக, அவர் போர்ச்சுகல் நாட்டிற்கு செல்கிறார். பின் 25 மற்றும் 26ம் தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். அதிபர் டிரம்ப் உடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 27ம் தேதி, நெதர்லாந்து செல்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளுடன் சுமூகமான உறவு பேணப்படுவது மட்டுமல்லாமல், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.