Breaking News
திருப்பதி சுவாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாச ராஜூ தெரிவித்ததாவது: திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விரைவு தரிசன முன்பதிவு, வாடகை அறை உள்ளிட்டவற்றிற்கு புகைப்பட அடையாள அட்டை எதேனும் ஒன்றை பெற்றுவந்துள்ளது.

இந்நிலையில் வங்கி கணக்கு, பான் கார்டுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின், திருப்பதியின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரேக் தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் ஆதார் கட்டாயம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.