போக்சோ சட்டம் என்றால் என்ன.?. யாருக்கெல்லாம் 10 ஆண்டுகள் சிறை, ஆயுள் தண்டனை வழங்கப்படும்.!.

போக்சோ சட்டம் என்றால் என்ன.?. யாருக்கெல்லாம் 10 ஆண்டுகள் சிறை, ஆயுள் தண்டனை வழங்கப்படும்.!.

 

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது.

இந்த போக்ஸோ (pocso) சட்டத்தின் வயது வரம்பு 18 லிருந்து 16 மற்றும் 12 வரை வகைப்படுத்தப்பட்டு இச்சட்டத்தில் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், அதற்கான தண்டனைகளும் என்னவென்று பார்ப்போம். போஸ்கோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4வது படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம். இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டணையாகவும் உள்ளது.

கூடவே அபராதமும் விதிக்கப்படும். போஸ்கோ சட்டப் பிரிவு 5 மற்றும் 6 வது படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

போஸ்கோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8வது படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகள் தொடுவது. அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம் அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு போஸ்கோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10வது படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள்

குழந்தையின், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறையும் பெற்றோர் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

போஸ்கோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12வது படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்வது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது போன்ற குற்றவாளிகளுக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

போஸ்கோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14வது படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம். இது இணைய தளம், கனிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

போஸ்கோ சட்டப் பிரிவு 18வது படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பது குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷர மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருத்தத்தை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
_________________________________
தொகுப்பு:
வக்கீல், ரமேஷ் பாண்டியன்,
தூத்துக்குடி.
95005 80660

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )