Breaking News
கலிபோர்னியாவில் உடையும் நிலையில் ஆரோவில் அணை: பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் வெளியேற உத்தரவு

அமெரிக்கா கலிபோர்னியாவில் இருக்கும் ஆரோவில் அணை உடையும் நிலையில் இருப்பதால் அந்த பகுதியில் இருப்பவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆரோவில் அணையின் 50 ஆண்டு கால வரலாற்றில் இதைப் போன்று மக்கள் அவசர அவசரமாக வெளியேறு சொல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் அமெரிக்காவில் இருப்பதிலேயே மிக உயரமான அணை என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கலிபோர்னியாவில் மிக அதிக மழைப் பொழிந்து வருகிறது. இதனால், ஆரோவில் அணையில் இருந்து அதிகப்படியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அணை பலவீனமடைந்து உடையும் தருவாய்க்கு வந்துள்ளது.

நன்றி : தினகரன்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.