Breaking News
பெடரல் வங்கியில் அதிகாரி பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள புரபஷெனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officers (PO)
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42020
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, அலகாபாத், பெங்களூரு, சத்தீஸ்கர், எர்ணாகுலம், இந்தூர், ஜெய்பூர், கொல்கத்தா, கோழிக்கோடு, லக்னோ, மும்பை, புதுதில்லி, புணே, திருவனந்தபுரம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.350.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2017
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 11.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.federalbank.co.in/documents/10180/10786259/Notification+-+PO+Advertisement/2e6c916c-afa6-46ea-8204-151bab76a7f8 என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.