Breaking News

வரும் 23-ம் தேதி உலகெங்கும் 1500 அரங்குகளில் விஷாலின் கத்தி சண்டை படம் வெளியாகிறது.

விஷால், வடிவேலு, சூரி, தமன்னா நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கத்தி சண்டை படத்தை நந்த கோபாலின் மெட்ராஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கேமியோ பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. மேலும் கேரளாவிலும் அதிக அரங்குகளில் தமிழிலேயே வெளியாகிறது.

தமிழகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் மட்டும் இந்தப் படம் 1500 அரங்குகளில் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.

காமெடியனாக வடிவேலுவின் மறுவரவு இந்தப் படத்துக்கு தென் இந்தியாவில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.