திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா 7-ம் நாளான இன்று தங்கச்சப்பரத்தில் “சிவப்புச் சாத்தி” பக்தர்களுக்கு காட்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா 7-ம் நாளான இன்று தங்கச்சப்பரத்தில் “சிவப்புச் சாத்தி” பக்தர்களுக்கு காட்சி

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவில் இன்று காலையில் வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி ஜெயந்தி நாதர் எழந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பணி நடைபெற்று வருகிறது.

சிவப்பு சாத்தி

7-ம் திருவிழாவான இன்று 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 4.30 மணிக்கு உருகு சட்டசேவை, காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி ஏற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் பிள்ளையன் கட்டளை மண்டகப்படியிலிருந்து தங்கச் சப்பரத்தில் சிவப்புச் சாத்தி எழுந்தருளி எட்டுத் திருவீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

செய்தி& புகைப்படங்கள் – சதீஷ்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )