
தூத்துக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடியவர் கைது – இருசக்கர வாகனம் மீட்பு
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தெற்கு புது தெருவைச் சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் முகமது ரியாஸ் (22) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 26.02.2024 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு பின்பு சிறிது நேரம் கழித்துவந்து பார்க்கும்போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.
இதுகுறித்து முகமது ரியாஸ் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருண் பிரசாத் (21) என்பவர் மேற்படி முகமது ரியாஸின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் போலீசார் அருண்பிரசாத்தை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.