இலங்கைக்கு கடத்த இருந்த ரூ50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் – தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் – தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி வேம்பார் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 84 மூட்டை பீடி இலைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகு மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது.

தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு பீடிலை, கஞ்சா, விரலி மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்து என பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும், அவர்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வேம்பார் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலைத் தொடர்ந்து வேம்பார் கடற்கரை பகுதிக்கு ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர், முதல் நிலை காவலர் இருதய ராஜ்குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கொண்ட கியூ பிரிவு போலீசார் அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த IND TN 12 MO 2478 என்ற பதிவு எண் கொண்ட எஸ்.நிரோன் எந்த நாட்டுப் படகை சோதனையிட்டதில் 30 கிலோ எடை கொண்ட 84 பீடி இலை பந்தல்கள் படகில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இலங்கைக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த பீடி இலைகளின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து கியூப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் கடத்தலில் ஈடுபட்ட தாளமுத்து நகரைச் சேர்ந்த கெனிஸ்டன் (29), பென்சிஸ் ராஜா (37), மாதவன் (21), பனிமையகார்வின் (19) ஆகிய 4 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )