
தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
தூத்துக்குடி முள்ளக்காடு ராஜீவ் நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் மகன் வெற்றிச் செல்வன் (30), லாரி டிரைவரான இவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு மனைவி கோபத்தில் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால் மனவேதனையில் இருந்த வெற்றிச்செல்வன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES மாவட்டம்