Breaking News
மாநில பள்ளி கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி கல்வி குழுமம் ஆதரவுடன் மாநில அளவிலான பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 27 அணிகளும் கலந்து கொள்கின்றன. காலை 7 மணி முதல் போட்டி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை தலைமை தாங்குகிறார். வருமானவரி இணை கமிஷனர் டாக்டர் எஸ்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த வீரர்-வீராங்கனைகளுக்கு சைக்கிள் பரிசாக அளிக்கப்படும். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், சான் அகாடமி அறங்காவலர் அர்ச்சனா ஆனந்த் ஆகியோர் செய்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.