Breaking News

 

மகாவீர் ஜெயந்தி விடுமுறை நாளில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

374 மதுபாட்டில்கள் பறிமுதல்

 

பூந்தமல்லி, ஏப், 7, மகாவீர் ஜெயந்தி விடுமுறை நாளில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 374 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் , பூந்தமல்லி மது விலக்கு போலீசார் மகாவீர் ஜெயந்தி விடுமுறை நாளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மாங்காட்டில் குன்றத்தூர் மெயின் ரோட்டில் கே.கே.நகரில் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்க்கப்படுவது தெரிந்தது.உடனே மதுபாட்டில்களை விற்ற , ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 324 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல, அம்பத்தூர் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது அயப்பாக்கத்தில் , திருவேற்காடு செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்கப்பட்டது தெரிந்தது.உடனே மதுபாட்டில்களை விற்ற திருவண்ணாமலை மாவட்டம் , புள்ளரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தவசீலன் ( வயது 53) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.