Breaking News
கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை – கங்குலி

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் பதவியை இழந்துள்ளார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை கங்குலி மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘இந்த பொறுப்புக்கு எனது பெயர் தேவையில்லாமல் அடிபடுகிறது. இப்போது அந்த பதவியை ஏற்கும் அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் ஓராண்டு நிறைவு செய்திருக்கிறேன். அந்த பதவி காலம் இன்னும் 2 ஆண்டு காலம் இருக்கிறது. கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை’ என்று தெளிவுப்படுத்தியுள்ளார். இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் துணைத்தலைவர் 64 வயதான சி.கே.கண்ணா, தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.