Breaking News
‛டிரம்ப் ஒரு பைத்தியக்காரர்’: சே குவாரா மகள் விளாசல்

”அமெரிக்க அதிபர், டிரம்ப், மனித குலத்தை அழித்துவிடுவார்,” என, கியூபா புரட்சியாளர், சே குவாரா மகள், அலெய்டா குவாரா மார்ச், தெரிவித்துள்ளார்.

கரீபியன் தீவு நாடான, கியூபாவில் புரட்சியாளர், சே குவாராவின் மூத்த மகள், அலெய்டா குவாரா மார்ச், 57; தலைநகர், ஹவானாவில் வசித்து வருகிறார். அவர், அளித்த பேட்டியில் கூறியதாவது:
மிகப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த என் தந்தை, அன்பானவர், ஒழுக்கமானவர் என, பெயர் பெற்றவர். ஆனால், அமெரிக்க அதிபர், டிரம்பிடம், அதிகாரங்கள் குவிந்துள்ளன; மனசாட்சி துளியும் இல்லை.பைத்தியக்காரத் தன்மை அதிகம் உடைய அவரிடம், அதிகாரம் கிடைத்ததால், பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அவரது நடத்தை, மனித குலத்தை அழித்து விடும்; அதை தடுப்பதற்கு, நாம் இப்போதே தயாராக வேண்டும்.

1997ல், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மறக்க முடியாது. இந்தியர்கள், நட்புணர்வு மிக்கவர்கள். இவ்வாறு, அலெய்டா கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.