Breaking News
எல்லையில் பதற்றம் : பள்ளிகள் மூடல்

பிப்ரவரி 27 ம் தேதி காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாதுகாப்புப் படை முகாம்கள், பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்திய ராணுவமும் இதற்கு தக்க பதிலடி கொடுத்தது. இருப்பினும் பாக்.,ன் அத்துமீறல் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனால் பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

பாக்., படைகள் தாக்குதல் நடத்திய போது ரஜவுரி மாவட்டத்தின் சில பள்ளிகளில் மாணவர்கள் உள்ளே இருந்தனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் வெளியே அனுப்பப்படவில்லை. தூப்பாக்கிச் சூடு நி்ன்ற பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.