Breaking News
தியோடர் டிராபியில் அஸ்வின் விலகல்

தியோடர் டிராபியில் இருந்து காயம் காரணமாக சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகி உள்ளார்.

50 ஓவர் வடிவிலான உள்ளூர் தொடரான தியோடர் டிராபி வரும் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தரம்சாலாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்தியா ஏ அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காயம் காரணமாக அவர் இந்தத் தொடரில் விலகி உள்ளதாகவும், அவரை ஒரு வார காலம் ஓய்வில் இருக்க மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக குறுகிய வடிவிலான போட்டிகளில் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் தியோடர் டிராபியில் சிறப்பாக செயல்பட்டால் தேர்வுக்குழுவினரின் பார்வையை அஸ்வின் தன் பக்கம் ஈர்க்க முடியும் என கருதப்பட்டது.

இதற்கிடையே அஸ்வினுக்கு பதிலாக மாற்று வீரராக சபாஷ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் கேப்டனாக அங்கித் பாவ்னே நியமிக்கப்பட்டுள்ளார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.