Breaking News
காவலர் தேர்வில் முறைகேடு உத்தரபிரதேசத்தில் 19 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் நேற்று தொடங்கிய காவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 19 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 41,520 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் இரண்டு நாட்கள் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. இதில், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 56 மாவட்டங்களில் மொத்தம் 860 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது மைக்ரோ செவித்திறன் கருவிகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 19 பேரை சிறப்பு அதிரடிப் படை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களுக்கு உதவி செய்தது யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.