Breaking News
பாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.

ஜோத்பூர் டவுன்ஹாலில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் சர்பூர், குடியுரிமை சான்றிதழ்களை வழங்கினார். பயனாளிகளில் பெரும்பாலானோர் கண்ணீர் பெருக்குடன் சான்றிழிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். அப்போது ‘பாரத மாதாவுக்கு ஜே’ என அங்கு கூடியிருந்தவர்கள் முழக்கமிட்டனர்.

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை அரசு மற்றும் பொதுமக்கள் முன் வைப்பதில் சீமந்த் லோக் சங்கதன் என்ற தன்னார்வ தொண்டுஅமைப்பு முக்கியப் பங்காற் வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஹிந்து சிங் சோடா கூறும்போது, “இவர்களுக்கு குடியரிமை வழங்குவதற்கான ஆணை 2016 டிசம்பரிலேயே பிறப்பிக்கப்பட்டது. இன்னும் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குடியுரிமைக்காக காத்துள்ளனர்” என்றார். -ஐஏஎன்எஸ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.