Breaking News
ஸ்ரீரெட்டி பற்றி நான் ஏன் பேச வேண்டும்? : பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், ஒரு பிரபல வார இதழுக்கு நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது, ஸ்ரீரெட்டி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் “ ஸ்ரீரெட்டி குறித்து நான் பேச மாட்டேன். சாதாரண பெண்ணுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு, அதை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமர்ந்து பேசினால் அது கேவலம். அதுவே ஒரு நடிகைக்கு வந்துவிட்டால் அக்கறை. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சாதாரண பெண்கள் கஷ்டப்படும் போது அதை கேவலாமா பேசினார்கள். இப்போது ஸ்ரீரெட்டி நடிகை என்றதும் அக்கறை வருகிறது. இது என்ன நிலைப்பாடு?” என அவர் கேள்வி எழுப்பினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.