அரசியலாக்கும் திமுக: தமிழக அரசு வாதம்
கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் விவகாரத்தை திமுக அரசியலாக்குவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்தனர். தற்போது இது வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஒரே நேரத்தில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இரவு வழக்கு விசாரணைக்கு வருவது எப்படி மனுதாரர்களுக்கு தெரியும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்கவில்லை.கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். ஆனால் திமுக இதனை அரசியலாக்குகிறது. திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான ஈ.வெ.ரா., மெரினாவிலா அடக்கம் செய்யப்பட்டார். இவ்வாறு வாதாடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்குகள் தான் சிக்கல் எனக்கூறப்பட்டது. ஆனால், அது நீங்கியுள்ளது. இடம் ஒதுக்கவதில் சட்டசிக்கல் உள்ளதா என வாதாட வேண்டும் என்றனர்.